இயற்கையின் அழகு

இயற்கையே எல்லையில்லா உந்தன் கொஞ்சும்
எழிலை கவிதையாய்த் தீட்டி புத்தகத்தில்
அடைத்துவைத்தேன் கவிஞன் நான்
நாளை ஆயிரம் ஆயிரமாய் மக்கள்
புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்த்து
கவிதைகளில் அடைந்து கிடக்கும் உனைத்தீண்டி
இன்பம் எய்துவர் நானும் மகிழ்ந்திடவே
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என
' அழகு ரசிப்பதற்கு ' அல்லவோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-22, 10:24 am)
Tanglish : iyarkaiyin alagu
பார்வை : 366

மேலே