நெஞ்சத்தில் உறைந்தவள்

நெஞ்சத்தில் உறைந்தவள்..!!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நெஞ்சத்தில் உறைந்தவள் மஞ்சத்தில்
நிறைந்தவள் /

அஞ்சுகம் எந்தனின் ஆசையில்
வளர்ந்தாளே/

விழிகளில் சிக்கினாள் விந்தையாய் மாறினாள் /

மொழியிலாக் கவிதையாய் மௌனத்தில்
பேசினாளே/

யாரோவாய் வந்தவள் யானாகிப்
போனாளே /

ஊரோடும் உறவோடும் ஒன்றாகிக்
கலந்தாளே/

நான்கு விழிகளின் ஒற்றைப் பார்வையில் /

ஏங்கும் இதயத்தில் இசையாய்த் துடிப்பாளே/

காலம் நீண்டிடும் நாட்கள்
வரையிலும் /

கோல மயிலென் கூட
வருவாளே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (23-Aug-22, 8:06 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 260

மேலே