நம் உதடுகள் இணைய உதட்டில் ஏக்கம் 555
***நம் உதடுகள் இணைய உதட்டில் ஏக்கம் 555 ***
ப்ரியமானவளே...
உன் விண்மீன் விழியை
சுற்றி எதற்கு கரு மை...
உன் கொழு கொழு கன்னமும்
குவிழ்ந்த உன் இதழ்களும்...
என்னை தினம்
உறங்கவிடுவதில்லையடி...
என்னை
எப்போது கடிப்பாய்...
என்னை எப்போது ருசிப்பாய்
என்று கேட்குதடி கண்ணே...
உன் புருவத்தின் மத்தியில்
வைத்த அட்டை பொட்டும்...
காரிருள் கூந்தலும் எனக்குள்
கலவரம் செய்யுதடி...
உன்
கழுத்து தங்க சங்கிலியும்...
கழுத்துக்கீழே மச்சமும்
இருக்கும் இடத்தில்...
முத்தம் கேட்குதடி
மெளனமாக என்னிடம்...
நம் கண்கள் பேச உதட்டில்
ஏக்கம் உதடுகள் இனைய...
வண்ணம் இல்லாத
என் இதழ்களில்...
வண்ணம் கொண்ட உன் இதழ்களால்
வண்ணம் பூசுவாயா மானே...
வினாடியில்
என்னை போதையாக்க...
சப்த்தம் இல்லாத உன்
இதழ் முத்தம் போதுமடி...
வெட்கத்தில் சிவக்கும்
உன் கொழு கொழு கன்னத்தை...
இமைக்காமல் நான்
ரசிக்க வேண்டுமடி...
உன் பூ முகத்தை
என் கைகளில் ஏந்தியபடி.....
***முதல்பூ.பெ.மணி.....***