அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள் - உண்மை விளக்கம் 16
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் – சிந்தையிவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்(கு)
உற்றதுசிந் திக்கும் உணர். 16
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
அந்தக்கரணங்களை முறையே சொல்லக்கேள்,
அம் மனமும் புத்தியும் அகங்காரமும் சித்தமுமாகிய இவையாம்,
(அவற்றுள் மனம்) பற்றியதனை (புத்தி) நிச்சயித்து, (அகங்காரம்) பலமுறை (அபிமானித்து) எழுந்து (சித்தம்) அங்கே யுற்றதனைச் சிந்திக்குமென்று அறிவாய்.