செவ்வாய்மென் புன்னகையே

ஞாயிறு என்னும் கதிர்விரி ஓவியம்
திங்கள் எனுமமு தம்பொழி யும்கலசம்
இவ்விரண்டும் கண்களில் ஏந்தி நடந்திடும்
செவ்வாய்மென் புன்னகை யே !



செங்கதிர் ஞாயிறு என்னும்பொன் ஓவியம்
திங்கள் எனுமமு தம்பொழி யும்கலசம்
இவ்விரண்டும் கண்களில் ஏந்தி நடந்திடும்
செவ்வாய்மென் புன்னகை யே


செங்கதிர் ஞாயிறு என்னும்பொன் ஓவியம்
திங்கள் எனுமமு தக்கலசம் -- மங்கையே
இவ்விரண்டும் கண்களில் ஏந்தி நடந்திடும்
செவ்வாய்மென் புன்னகை நீ !

யாப்பு விழைவோர் குறிப்பு :

முறையே பலவிகற்ப இன்னிசை வெண்பா , இருவிகற்ப இன்னிசை
வெண்பா மற்றும் இருவிகற்ப நேரிசை வெண்பா

அழகியல் கவிதை வரிகளாக எல்லோரும் ரசித்துப் படிக்கலாம்
அதற்கு எந்த யாப்பு அறிவும் தேவை இல்லை

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-22, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே