தனிமை
தனிமை இனிமையானது !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தனிமையில் கிடைத்திடும் சுகமோ
இனியது /
இனிவரும் காலம் முழுதும்
எளியது /
அப்பனும் அம்மையும் அண்ணனும்
தம்பியும்/
ஒப்பிலாத் தங்கையும் அக்காவும்
துறந்தோம் /
மனைவி என்றொரு மந்திர
வாதியால் /
அனைத்து அன்பை நட்பை
மறந்தோம் /
மழலைச் செல்வங்கள் பிறந்திட
சேர்ந்திட /
மனைவியைக் கூடயாம் மறந்தே
போனோம் /
யாவும் கடந்திடும் நாளும்
வந்தது/
தூய மனதோடு தனியே
மகிழ்வோம்!!
-யாதுமறியான்.