ஔவையார்

ஔவையார்.
🌺🌺🌺🌺🌺

அறம்செய விரும்பு என்றநற் கவியே !
மறம்செயும் மார்க்கமும் மன்னவர்க்கு உரைத்தாயே!

அதியனின் நெல்லியோ சாவா மருந்து /
புதியதாம் தமிழோ வாழ்விக்கும் விருந்து /

ஆத்திச் சூடியைச் சூடினாய் நீயே /
போற்றிடும் தூதராய்ப் போனாய்நீ தாயே/

அணுவைப் பிளந்திடும் அறிவியல் உரைத்தவள் /
அணுகிடும் யாரையும் அன்பினால் கவர்ந்தவள்/

செம்மொழி உள்ளவரை வாழ்ந்திடும் ஔவையே/
எம்மொழி ஆயினும் உன்மொழி போற்றுமே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (9-Sep-22, 9:12 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 41

மேலே