கொடுப்பவர் கொடையினும் இரப்பவர் கொடை யேற்றமாம் – அறநெறிச்சாரம் 178

நேரிசை வெண்பா

பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரின் வள்ளலும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்த லால் 178

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

இரப்பவர் இம்மையிற் புகழையும் மறுமையில் இன்பத்தையும் ஈவோருக்கு உதவுதலால், கடல் சூழ்ந்த உலகில் உள்ள எல்லா மக்களுயிர்கட்கும் இரப்பார் போன்ற சிறந்த வள்ளல்கள் பிறரிலர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 7:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே