சிவந்த அரிதாரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சிவந்தஅரி தாரமது செஞ்சிலைபோற் காட்டும்
உவந்ததனை யுண்முறையோ டுண்டால் - இவர்ந்தாழ்
சுரங்குளிர்மா வாதமுடற் சூலை,நமை குட்டம்
இரங்குமென நாளும் இசை
- பதார்த்த குண சிந்தாமணி
சிவந்த கல்லைப் போலிருக்கின்ற அரிதாரத்தைச் சுத்தி செய்து முறையாக உண்டால் குளிர்சுரம், மகாவாதம், உடல் குத்தல், தினவு, குட்டரோகம் ஆகியவை நீங்கும்