சிவந்த அரிதாரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிவந்தஅரி தாரமது செஞ்சிலைபோற் காட்டும்
உவந்ததனை யுண்முறையோ டுண்டால் - இவர்ந்தாழ்
சுரங்குளிர்மா வாதமுடற் சூலை,நமை குட்டம்
இரங்குமென நாளும் இசை

- பதார்த்த குண சிந்தாமணி

சிவந்த கல்லைப் போலிருக்கின்ற அரிதாரத்தைச் சுத்தி செய்து முறையாக உண்டால் குளிர்சுரம், மகாவாதம், உடல் குத்தல், தினவு, குட்டரோகம் ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-22, 4:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே