எல்லாம் எல்லாம் இயற்கை தந்த பாடம் தான்

இயற்கை தந்த பாடம்
எங்கோ பிறந்தா காகம், எனக்கு உறவின் ஆழத்தை சொல்லித்தரும்;
இங்கே வந்த பசும், கன்றை நாவல் நக்கி
பாசத்தைப் புகட்டும்;
இருளைத்தொடரும் பகல்,எடுத்து இயம்பும்
நம்பிக்கையென்னும் விடியல்;
பறவை விலங்குகளின் இதயத்தில் ஊரும் இரக்கம்;
மனித நேயம் இறக்கக் கூடாது என்பதை புகட்டும்;
கருணை உள்ளம் கைகொடுத்து தூக்க துடிக்கும்;
எங்கோ பிறந்த மேகம்;
ஏங்கும் புவிக்கு மழைநீரைப் பொழியும்;
எடுத்து கூறும் கருணையின் பெருமையை;
எங்கோ விழுந்த மழையும்,
ஆறாய் நீரைச் சுமந்து வரும்;
இங்கே பிறந்த நாம், இன்னும், ஏற்றத்தாழ்வுடன் வாழ்வது துரோகம்;
எங்கோ பருந்தை பார்த்து,
அழகாய் பொரித்த குஞ்சியைக் கோழியும்
குடு குடு வென்றே, தன் சிறகுக்குள்
மறைத்தே தாய்மையின் பெருமையைக் புகட்டும்;
ஆறறிவுப் பிராணி, ஆட்டுது வாலை,
அய்யமற்ற அன்பை காட்டுது நாயும்;
கூடித்திரிந்து வனத்தில் மேயும் கால்நடைகளும் ஒற்றுமையின் மேன்மையை புகட்டும்;
விண்ணில் பறந்த பறவைகளும்
கூடிவாழ தந்தது பாடம்;
சலைக்காது சாறை சாறையாக சென்ற
எறும்புகலும் உழைக்க தூண்டும்;
தேனைச் சுமந்த தேனிக்கள்,
சேமிப்பின் முக்கியத்துவத்தை கூறும்;
விசும்பின் துளிகள்,இயற்கை தந்த கொடைகள்;
கருணையின் தூவல் கண்ணீரை துடைக்க வரும் சுகம்;
அழகிய பின்னல்,அதில் ஒரு ஜன்னல்;
பின்னியது தூக்கனாம் குருவி;
வீட்டுக்குச் ஜன்னல்,
விரட்டியடிக்கும் நோயை;
எங்கோ நின்ற மரங்கள்,
நன்றாய் காற்றை சிலு சிலு என்றே வீசி அனுப்பும்;
மண்ணும் வேரும் அன்பின் இருக்கங்கள்;
பூத்த சோலை , புத்துயிர் ஊட்டும் பூஞ்சாலை ;
புதையுண்டது பேராசை:
நிழலைச் சுமந்த மரங்கள்,
நிற்க குடையான மரங்கள்;
காய் கனியைத் தருகின்றது;
சுயநலம் இல்லா மரங்கள்
சொந்தத்தை சுமந்த மரங்கள்;
கண்ணுக்குத் தெரியாத
காற்று, கடிந்தால் தாங்க முடியாத சிதைவு;
உணவைத் தரும் விவசாயம்,
உயிரைக்காத்த மரம் செடிகொடிகள்,
உலகைவிட்டு சென்று விட்டால்
உயிர்களுக்கு இடம் இல்லை;
காலையும் பொழுதும்,
காத்திருந்து வரவில்லை;
காலத்தில் இல்லை,
நல்ல காலம் கெட்டகாலம்;
கடமையைச் செய்வது பொழுது;
கவலையைப் போக்குவது உறவு;
காலம் என்பது மணித்துளிகளின் தொகுப்பு;
சொல்லாமலே தூவிவிட்டு செல்லும்
நில்லாமலே நடையைக் கட்டும்;
நினைத்துப் பார்ப்பதற்குள்
நடந்துவிடும் காலம்.
காலம் முடிந்த நிகழ்வுகள்;
கண்ணீரைச் சுமக்கும் சோகங்கள்;
நாம் விதைத்ததில் வந்ததுதான்
நல்லதும் கெட்டதும்;
மழலையின் சிரிப்பு
மனதிற்கு இதமான தவிப்பு;
மலர்களின் சிரிப்பு, மகிழ்ச்சி ஊட்டும் படைப்பு;
கிளியின் கொஞ்சல்,
கிளு கிளுப்பு மையல்;
ஆடிய மயிலின் ஆட்டம், அழகிய நடனத்தின் ஒத்திகை;
அன்பாய் குழாவிய புறாக்கள்;
அலாதியான அழகிய காதல் காவியம்
பாடித்திரிந்த பறவைகள்,
பார்த்தே பறக்கக் கற்றுக் கொண்ட மனித இனம்;
பாதை மாறிப்போய் பாசத்தை மறந்து தவிப்பதைப் பார்;
ஆழ்கடல், அளவிடமுடியாத ரகசியம்;
ஆழ்மனம் அறிமுடியாத அதிசயம்;
அலையின் சீற்றம், குமுரலின் தாக்கம்;
துளி துளித் தூரல், துவண்டவனின் நம்பிக்கைச் சாரல்;
வர்ணத்தைத் தெளித்த வானம்,
வந்தே வரைந்தது வர்ணஜாலம்;
இயற்கையின் தேடல், இன்ப ஊடல்
கவிஞனுக்கு பாடல்;
கலைகட்டியது அழகின் தேடல்;
புயலுக்குப்பின் அமைதி,
பொருத்திருந்தால் கிடைக்கும் நிம்மதி.
உணவைத்தேடி ஓடும் பறவைகள்,
உழைப்பில் கிடைக்கும் சாதனை.
உரித்தது உன் சோம்பலை.
உயரே பரக்கும் பருந்து,
உணவை எடுக்கும் பறந்து;
உடம்பில் உண்டு ஊனம்;
உள்ளத்தில் இல்லை இந்த ஊனம்;
உயர்வுக்கு ஏது முடக்கம்;
உயரம் இல்லாத சிகரமா;
துயரம் இல்லாத உயரமா;
உதவி இல்லாத பிறவியா;
உறக்கம் இல்லாத தூக்கமா;
தாக்கம் இல்லாத வீக்கமா;
தயக்கம் இல்லாத துவக்கமா;
துவக்கம் இல்லாத தோல்வியா;
தோல்வியில்லாத வெற்றியா;
இதயம் இல்லாத இரக்கமா;
இரக்கம் இல்லாத ஈகையா;
கலக்கம் இல்லாத கண்ணீரா;
கண்கள் சுமப்பது சோகமா;
சலனம் இல்லாத வெப்பமா;
சருக்கம் இல்லாத இறக்கமா;
மானிடா இயற்கையுடன் வாழ்ந்த நீ,
சிறகைவெட்டி பறக்கவிட்டாய்;
சினத்தைக்கொட்டி சிந்திக்க மறந்தாய்;
இதயத்தை வெட்டி, பாசத்தை மறந்தாய்;
இருப்பதையெல்லாம் அழிக்கத் துடித்தாய்;
இருமாப்படன் வாழ்ந்து இதயத்தில் சுரக்கும் இரக்கத்தை துடைத்தாய்;
சக்கரமாய் சுழண்டு ஓடினாய்;
சாக்கடை வாழ்க்கையில் குதித்தாய்;
சகதியை பூசியும் சலிப்பும் அடைந்தாய்;
மரம் பட்டபின் வேருக்கு நீர் ஊற்றப்பார்க்கின்றாய்;
மனம் பட்டபின் பாசத்தைத் தேடி தவிக்கின்றாய்;
பணம் இருந்தும் பசிக்கு உணவு தின்ன முடியாது தவிக்கின்றாய்;
வெந்தபின்னும் வெண்நீர், ஊற்றப்பார்க்கின்றாய்;
நொந்தபின் நினைத்துப்பார்க்கின்றாய்;
நோய் வந்தபின் துடிக்கின்றாய்;
சுட்டபின் சூட்டை ஆ என்றே சாடுகின்றாய்;
சுமையைச் சுமந்தபின்,
சொல்லிக் கதறுகின்றாய்;
எல்லாம் உண்டு இயற்கையில்
எட்டவில்லை மனிதனின் புத்திக்கு;
குயில் தந்தது கீதம்,
காற்று தந்தது விசையை;
காதல் தந்தது சுவையை;
மழை தந்தது நீரை;
மரம் தந்தது காற்றை, கனியை, நிழலை,
கழனி தந்தது பயிறை;
இரவு தந்தது உறக்கத்தை;
உறவு தந்தது இரக்கத்தை;
பகல் தந்தது வெளிச்சத்தை;
வனம் தந்தது வளத்தை;
வானம் தந்தது மழையை;
வேர் சுமக்கது
மண் சுமக்குது
மரம் சுமக்குது,
எல்லாம் சுமக்குது பின்
ஏன் உனக்குள் பகையும் சீற்றமும்
எல்லாம் எல்லாம் இயற்கை தந்த பாடம் தான்.
அன்பன் அ. முத்துவேழப்பன்