கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சொன்ஞானஞ் சோர விடல் – நாலடியார் 311
இன்னிசை வெண்பா
மெ'ய்'ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல் 311
- அவையறிதல், நாலடியார்
பொருளுரை:
உண்மையறிவினை யுடைய கூட்டத்திற் கலந்து அவர் வழி நின்றொழுகுதலை விடுத்து அதற்கு மேலும் அம் மெய்ஞ்ஞானம் உடையாரிடையே தமது ஓர் அறியாமைக் கருத்தையும் உரைத்து, அதனையே மிகவும் பன்னிப் பன்னிப் பேசி இவ்வாறு தமது சிற்றறிவே பற்றி ஒழுகுகின்ற மயக்கவறிவினர் எதிரில் புகழ்தற்குரிய தமது ஞானப் பெருமையினைக் காட்டிக் கொள்ளாமல் தளர்த்துக் கொள்க.
கருத்து:
தமது சிற்றறிவையே பேரறிவாகக் கொண்டு அடங்காது ஒழுகுவாரிடம் சான்றோர் தமது ஞானப் பெருமையை வெளிப்படுத்திக் கொள்ளார்.
விளக்கம்:
‘கை' சிறுமைப்1பொருட்டாதல் ‘கையேடு' ‘கைவாள்' என்பவற்றானுங் காண்க; அறியாமை மிகுதியாக உடைய அறிவென்றற்குக் ‘காரறிவு' எனப்பட்டது!