அடுத்தடுத்துச் சென்றாங்கு அடைந்து களைவினை யென்பரே – அறநெறிச்சாரம் 184

நேரிசை வெண்பா

கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின் - அடுத்தடுத்துச்
சென்றாங் கடைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து 184

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஞானாசிரியன் அன்போடு தன்னையடைந்த மாணாக்கனது திறமைக்கேற்ப உபதேசிக்க வல்லவனாதல் அமையின் பலமுறை அவன்பாற் சென்று அவன் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டு பிறவிக்குக் காரணமாய வினைகளை நீக்குமின்’ எனப்புலன்களை வென்ற முனிவர் யாவரும் உணருமாறு விரித்துக் கூறுவர்.

குறிப்பு:

‘அடுத்தடுத்துச்’ சென்றாங் கடைந்து களைவினை என்றதன் குறிப்பால், கொடுப்பான் கொள்வான் என்பன ஆசிரியனையும் மாணாக்கனையும் முறையே உணர்த்தி நின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-22, 9:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே