சிறு தீண்டல்
சிறு தீண்டலில்
உயிர் உலுக்கும்
நேசத்தின் உச்சம் நீ!
சிறு புன்னகையின்
வீச்சுகளில்
இருளகற்றும்
வெளிச்சம் நீ!
வேண்டாம் என்றாலும்
வேண்டி நின்றாலும்
தூறாலாகி..பெய்துசெல்லும்
மழை வெள்ளம் நீ!
அந்தகாரம் நிறைந்த
புதிர் நீ!
என்னவாக இருந்தாலும்
உயிர்பற்றும்
பொறி நீ...
நித்தம் வெந்தனலில்
எரிக்கும் ருத்ரம் நீ!