காதல்
இதயத்தின்
அடி ஆழத்திலிருந்து..
வேட்கையாய்
மிகுந்தெழுந்து...
ஆட்கொள்ளும்
ஆகச்சிறந்த
அன்பிற்கு...
இறையிடம்
எப்போதும்
தடையில்லை!
கவனமாக
இருங்கள்!
அன்பினது....
வழிகளில்
ஆகச்சிறந்த
பக்திக்கு முன்
சூறாவளியாய்
சுழற்றிப்போடும்
காதல்....
நீட்சியடைந்து
வேறொன்றாகிவிடாது
இருக்க!!