உயிர்க்கொல்லியே

!

ஏ மனிதா.....
அணைத்து விடு சிகரெட்டை
இல்லையேல்
அணைத்து விடும் உடற்க்கட்டை

பற்ற வைத்தது போதும்
உன்னைப் பற்றவைக்க
சிகரெட் ஒன்றே போதும்

சிகரெட்டே.....
ஐந்து விரலோடு ஆறாவதாய்
புகையும் விரலே
உன்னை விலக்காவிடில்
கருகும் ஈரலே

காலில் போட்டு நசுக்கினாலும்
மீண்டும் பொசுக்க வருகிறாய்
உதட்டளவு நண்பனாய்

காசை கரியாக்கச் செய்யும்
காரியவாதியே
பொதுஇடத்தில் புகைக்க வைக்கும்
சுயநலவாதியே

சிகரெட்டே ...
புகைவதை நீயாவது நிறுத்து
ஏற்கனவே
புகைந்துகொண்டிருக்கிறது
மானிடனின் மனது
விலைவாசியால்..
வேலையின்மையால்...
வறுமையால்..
சாதி மத பேதத்தால்...


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (11-Nov-22, 10:36 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 63

மேலே