இற்செய் குறைவினை நீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு - நாலடியார் 332

இன்னிசை வெண்பா

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு 332

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய குறைகளைச் செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கி இருப்பாரது இழிதகைமை,

பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர் முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.

கருத்து:

நடவாததொன்றை நினைவது பேதைமையின் இயல்பு.

விளக்கம்:

ஒருங்கு - எல்லா அலைகளும் உடன் சேரல், ஓசையென்றது, இலக்கணையால் அலையின் மோதுதலை யுணர்த்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-22, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே