சீரொழுங் கில்லாத செம்மையிலாச் செய்யுள் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீரொழுங் கில்லாத செம்மையிலாச் செய்யுளை
வேரொடு கிள்ளியெறி வீணென்று; - தாரில்லாச்
சாலையைப் போலத் தரமின்றித் தானிருக்கும்
பாலையென்றே சொல்வேன் பரிந்து!

- வ. க. கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-22, 1:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே