தற்குறி என்றால் யாரோ - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

தற்குறி என்றால் யாரோ
..தனக்குத்தான் தெரியா தாரே;
உற்றதைக் கற்ப தில்லை
..உறுபொருள் அறிவ தில்லை!
கற்பனை வளமு மில்லை
..கண்டதைக் கற்ப தில்லை;
கற்புழை மிருகம் போலக்
..களிப்புடன் பேசு வாரே! 1

சிற்றிடை மாதே கேளாய்!
..செப்புவேன் நல்ல சொற்கள்;
சொற்சுவை கொண்ட பாக்கள்
..சுவையுடன் கற்றுத் தானே
தெற்றெனத் தவறே யின்றித்
,,தெளிவுடன் எழுத வேண்டும்;
நற்றுணை யாகத் தானே
,,நல்லோரின் நட்பும் வேண்டும்! 2

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 2:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே