கந்தனவன் சோதரனே காப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நற்றமிழில் நாளும்நான் நற்பாக்கள் நன்முறையில்
குற்றமின்றிப் பாடிடவே கூறுகின்ற - கொற்றவனாய்
எந்நாளும் என்வாழ்வில் இன்பமுறச் செந்தூரின்
கந்தனவன் சோதரனே காப்பு!

– வ.க.கன்னியப்பன்

இதை வாசிப்பவர்கள் ஒரு எளிய முயற்சியாக

‘கந்தனவன் சோதரனே காப்பு!’

என்ற ஈற்றடிக்கு தக்க எதுகை, பொழிப்பு மோனையுடன் சீர்களை வகையுளியின்றி ஒரு வெண்பா எழுதுங்களேன், மகிழ்வேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 9:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே