351 துன்பொழித்து இன்பம் சுரக்கும் இன்சொல் – இனிய சொற்கூறல் 8
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
உருமைமின் னினைத்தன் பாற்கொண்(டு)
உதகமன் உயிர்க்கு நல்கும்
கருமுகி லெனக்கண் ணாலென்
= காணினும் கேட்பி னுஞ்சூழ்
பருவர லேதி லார்க்குப்
= பயக்கும்வன் சொல்லை நீத்து
மருவிய நலங்க லந்த
= வசனமே பகர்வர் நல்லோர். 8
– இனிய சொற்கூறல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”இடியையும் மின்னலையும் தன்னிடம் வைத்துக்கொண்டு தண்ணீரை நிலை பெற்ற உயிர்களுக்குத் தரும் மேகம் போல, கண்களால் என்ன பார்த்தாலும், காதால் கேட்டாலும் ஏதுமற்ற அயலவர் துன்புறும்படியான வன்சொல்லை விலக்கி, நன்மை சேர்க்கின்ற இன்சொல்லையே நல்லோர் கூறுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
உருமை - இடியை. உதகம் - நீர். பருவரல் - துன்பம்.