💕உறவும் பிரிவும்-2💕
அன்பே...
என்னில் நிழலொன்றை பிரிந்தேன்...
உன்னில் நிசமொன்றை சந்தித்தேன்....
அவளே உயிரென்று யாசித்தேன்...
இவளே உறவென்று யோசித்தேன்...
கற்பனையில் கனவுகளை நேசித்தேன்...
கவிதையில் நினைவுகளை புசித்தேன்...
நித்திரையில் என்னையே மறந்தேன்...
இதயத்திரையில் உன்னையே நினைத்தேன்...
பிரிவில் உன்னை இழந்தேன்...
உறவில் என்னை புதைத்தேன்...