💕அம்மா💕

தாயே...
உன் மடியில்
தூங்கினால் தலையணையில்
கிடைக்காத சுகம்
உன்னில் கண்டேன்
சொர்க்கம்...

உன் காலடியை
வணங்கினால் தெய்வங்களின்
கிடைக்காத ஆசீர்வாதம்
உன்னில் கொண்டேன்
பாக்கியம்...

கடவுளை தேடி
கோவிலுக்கு போனார்கள்
நம் வீட்டில் இருப்பதை
மறந்து...

கடவுளுக்கு பல
பெயர்கள் இருந்தாலும்
உனக்கு ஒரு
பெயர் தான் "அம்மா...!!!"

எழுதியவர் : இதயவன் (30-Dec-22, 8:27 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 148

புதிய படைப்புகள்

மேலே