தோரணை

அதிகார தோரணையில்
நீ பேசும் வார்த்தைகளில்
மென்மை இல்லாதபோது
வேதனைகளை
விலைக்கொடுத்து வாங்கி
உந்தன் மதிப்பை நீயே
கெடுத்து கொள்வாய்

அதிகாரம் உள்ளவன்
வெற்று ஜம்பமில்லாமல்
அன்பாக பேசும் போது தான்
சிறந்த பண்பாளன்
என்ற பெருமையைப் பெறுகிறான்...!!

--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Dec-22, 6:00 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thoranai
பார்வை : 346

மேலே