நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் – அறநெறிச்சாரம் 214
நேரிசை வெண்பா
அளற்றகத்துத் தாமரையாய் அம்மலரீன் றாங்கு
அளற்றுடம் பாமெனினும் நன்றாம் - அளற்றுடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுத லான். 214
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
சேற்றினிடத்து வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல, தூய்மையில்லாத உடம்போடு கூடி வாழ்ந்தும் நன்ஞானம் நல்லறிவு நல்லொழுக்கம் என்பன ஒருவனால் அடையக்கூடுமாதலால் உடம்பு அசுதமானது எனினும் அதனோடு கூடி ஒழுக்கமாக வாழ்தலே நல்லது எனப்படுகிறது.