127 கணவனுறை நெஞ்சில் வேறு கருத இடம் ஏது - கணவன் மனைவியர் இயல்பு 19

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

தோழிகேள் உனக்குமோர் துணைவன் உண்டவன்
வாழித யத்தினான் மற்ற மாதரைப்
பாழினி னினைக்கின்றாய் பாவி நெஞ்சுனக்(கு)
ஆழிசூழ் உலகினில் அனந்த மேசொலாய். 19

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

தோழியே, கேள்! உனக்கும் துணையாக ஒப்பில்லாத ஒரு கணவன் உண்டு. அவன் உன் நெஞ்சினில் வாழ்கின்றான். மற்றைய பெண்களைப் போல் வீணாக ஏன் நினைக்கின்றாய்?

பேதையே! உன் கணவன் உறையும் நெஞ்சமே உனக்கு கடல் சூழ்ந்த இவ்வுலகில் அழிவில்லாதது எனச் சொல்வாயாக! என்று கற்புடைய பெண்களுக்கு கணவன் நினைவு உறைகின்ற நெஞ்சில் வேறு எண்ணத்திற்கு இடமில்லை என்று இவ்வாசிரியர் கூறுகின்றார்.

ஓர் - ஒப்பில்லாத. வாழ்தல் - உறைதல். இதயம் - நெஞ்சு. பாழ் - வீண். பாவி – பேதை, ஆழி - கடல். அனந்தம் - அழிவில்லாதது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-23, 8:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே