பெத்தலையில் பிறந்தவர்

இதோ இயேசு வந்துவிட்டார்
பனிப்போர்வை அவரது திருமேனியை மூட,
ஒளிவட்டத்தால் முகம் மட்டுமே தெரிந்தது.

காயங்கள் எல்லாம் ஆறி முகத்தில் சில வடுக்கள் மட்டும் தென்பட்டன.
முன்னோர்கள் செய்த பாவத்திற்காக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு அழுதனர் சிலர்.

விவிலியம் வாசித்து ஆராதனை செய்தனர் சிலர்.
"ஓசன்னா பாடுவோம்" என்றபடி தூரத்தில் நின்றிருந்த சாத்தான்
மனந்திருந்திப் பாடத் தொடங்கினான்

எல்லோரும் தவறுகளை உணர உணர அவர் உடலை மூடியிருந்த பனி
மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது

இப்பொழுது குடியானவர்கள் இயேசுவின் பாதங்களை உற்று நோக்கினார்கள்
பாவமன்னிப்பின் முதற்படியாய் இயேசுவைச் சுமந்துகொண்டு வந்தது "அதே சிலுவை"

எழுதியவர் : திசை சங்கர் (27-Jan-23, 2:27 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 59

மேலே