88 படிப்பே பிள்ளைகட்குப் பயன் பெரிதளிக்கும் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 5

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

சுகமுறு வாழ்வில வெனினுந் தோன்றற்குச்
சகமகிழ் கலையறந் தனைப்ப யிற்றுதல்
அகநினைந் ததுதரும் அரத னந்தனை
இகபரம் இரண்டினை யீத லொக்கும். 5

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”செல்வவளம் உடைய வாழ்க்கை இல்லையென் றாலும், பிள்ளைகட்கு உலகத்தில் மகிழ்வு தரத்தக்க கல்வியும் நற்பண்பும் சொல்லித் தருவது, மனதில் கருதியது கைகூடச் செய்யும் இரத்தினமும், இம்மை, மறுமை என்ற இரண்டும் தருவதற்கு ஒப்பாகும்” என்று பிள்ளைகளைப் படிப்பித்தலின் பயனை பெற்றோருக்கு எடுத்துரைக்கிறார் இப்பாடலாசிரியர்.

சுகம் - செல்வம். சகம் - உலகம். தோன்றல் - மக்கள். அரதனம் – இரத்தினம் (A precious stone)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-23, 4:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே