மனதோடு உறவாடியவள்..

கரடு முரடாக
சுற்றித்திரிந்த காட்டுப்பகுதியை கூட..

அழகை ரசிக்க
வைத்தவள் அவள்..

வெறும் முட்களாக
கிடந்த மனதை..

இன்று பூபோல் மாற்றியவள் அவள்..

ஏனோ மனதோடு
உறவாட வந்தவளே..

மயக்கம் கொள்கிறேனடி உன் மீது..

என்னை பூவாக
மாற்றி..

என்னில் தேனாக சுரக்கிறாள் அவள்..

எழுதியவர் : (28-Jan-23, 8:00 pm)
பார்வை : 106

மேலே