போலீஸ் சேமியா

ராயன்: எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளைப்பா, ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கும் பொண்ணை பெரியமனத்துடன் கல்யாணம் பண்ணிக்கின்னாரு.
காத்தவராயன்: அந்தக் குழந்தை அந்தப் பொண்ணோட தங்கச்சி குழந்தை. தங்கச்சி ரெண்டு வருஷம் அமெரிக்காவில் வேலை முடித்துக்கொண்டு திரும்பிவரும் வரைக்கும் குழந்தை அக்காகூட இருக்கும்.
ராயன்: இந்த விஷயம் மாப்பிள்ளைக்குத் தெரியுமா?
காத்தவராயன்: இந்த மாப்பிள்ளைதானே இந்த பொண்ணோட தங்கச்சியை காதல் மட்டும் பண்ணிட்டு கல்யாணம் செய்யாமல் வுட்டுட்டுட்டு ஓடிட்டாரு. ஓடிப்போவதற்கு முன்னால, ஒரு நாள் இரவு ரகசியமாக ஆஸ்பத்திரிக்குப் போய் அவரது காதலியிடமும் பிறந்த அந்தக் குழந்தையிடமும் " சாரி, நான் இப்போ உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு ஓடிபோகப்போறேன், பை பை" என்று சொல்லிவிட்டு ஓடிப்போயிட்டார்.
ராயன்: இப்போ எப்படி அந்தப்பொண்ணோட அக்காவை கல்யாணம் செய்துகின்னார்?
காத்தவராயன்: இந்தப் பொண்ணு போலீஸ் அதிகாரி எப்படியோ வலைபோட்டுத்தேடி இந்த ஆளை புடிச்சிருச்சி. அப்போ அந்த ஆள் பயந்துபோய் " வேணும்னா நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீங்க உங்க தங்கச்சியைவிட அழகாக இருக்கிறீங்க. என்னைச் சிறையில் போட்டுடாதீங்க" என்று கெஞ்சியபோதுதான், நம்ம போலீஸ் பொண்ணு ஒரு கல்லுல ரெண்டு மாங்கா என்று அந்த ஆளையே கல்யாணம் செய்துக்கிட ஒப்புக்கிட்டாங்க.
&&&

காத்தவராயன்: நானும் கவனிக்கிறேன், ரெண்டுநாளா கல்யாணத்துல சேமியா பாயசம், சேமியா கேசரி, சேமியா லட்டு, சேமியா சேவை, சேமியா கொழம்பு, சேமியா இட்லி, சேமியா ரசம், சேமியா சட்னி, சேமியா வறுவல், சேமியா துவையல்..சேமியா... .
ராயன்: டேய் , நிறுத்துடா என்ன உட்டா சேமியா சூப்பர்மார்கெட் ஒன்னு போட்டுடுவ போலிருக்கு. கல்யாணப்பொண்ணோட அப்பா 'அணில் சேமியா' கம்பெனி முதலாளி. இப்போ வருடக்கடைசி என்பதால் ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனை பண்ணுறாங்க. அதனால் சேமியா ரொம்ப கம்மியான விலைக்கு கெடைச்சதால கல்யாண சாப்பாட்டிலும் சிற்றுண்டியிலும் சேமியாவை போட்டிருக்காங்க. அதுமட்டும் இல்லை, மாப்பிள்ளைப் பேரை ஏன் ' மயில் சாமி"க்கு பதில் அணில் சாமின்னு மாத்திட்டாங்கன்னு கூட இப்போ உனக்கு புரியுதுனானே?
காத்தவராயன்: நல்லாவே புரியுது. இப்போ உன் பேரையும் மாத்தி "சேமியா ராயன்னு" வச்சிக்கிடு.
ராயன்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Feb-23, 4:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 36

மேலே