புதுக் கவிதைகள்

காட்டாறு போல பெருகிவரும் கற்பனையில்
முளைக்கும் முத்து முத்தாம் சொற்கள்
கோர்வையும் கவிதைத் தானே
காட்டாறு வெள்ளத்தைக் கட்டி நிறுத்த
முடியாது அதுபோல் இலக்கண
வரம்பால் அணைக்க முடியா
கவிதை வர்க்கம் புதுக் கவிதைகள்
பள்ளுப் பாட்டுக்கு ஏது இலக்கணம்
;மெத்துசேர்த்து பாட துள்ள வைக்கும்
துள்ளாத மனத்தையும் அது அல்லவா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Mar-23, 7:37 pm)
Tanglish : puthuk kavidaigal
பார்வை : 156

மேலே