பயமே வேண்டாம்
எண்சீர் (கழி நெடிலடி) ஆசிரிய விருத்தம்
நண்பா நீயும் நன்றாய் சொல்வாய்
.......நல்ல தமிழர் நாக ரீகம்
பண்பை விளக்க பயமென் உனக்கு
.......பயமே வேண்டாம் படித்த யாப்பை
கண்ணாய் எடுத்தாள் கயவர் கெடுக்க
......... கடுக விரட்டு காண்பாய் மாட்சி
பண்ணை இணைக்கும் பாடல் தளையை
,......படித்து எழுதி பாட்டை உயர்த்தே
எடுத்தாள் == எடுத்து ஆளு poetic form எடுத்தாள்
இந்த எளிமையான மாச்சீரில் அமைந்த சொற்ப இலக்கணம் பொருந்திய எண் சீர் ஆசிரிய விருத்தம் கூட எழுதுவதற்கு கடினமாம்.. முயன்று பார்க்க வேண்டும்.
பேசுவதை கவிதை என்று நினைத்து தினம் பத்து குப்பையை சிலர் கொட்டுவதை நாம் பார்க்கிறோம். தவு செய்து மாச்சீரில் மேலே உள்ளபடி தினம் ஒரு கவிதைத் எழுதுங்கள் . தமிழை வாழ விடுங்கள்
மண்டையில் ஏறவில்லை என்பது ஆச்சரிய மாகவேப் படுகிறது.
இந்த சீர் விருத்தமும் கூட ஒழுங்காக எழுத முடியாதவர்கள் எதற்காக
கலித்துறை, கட்டளை கலித்துறை எழுதி கட்டை விரலை சுட்டுக் கொள்கிறார்களோத் தெரியவில்லை.