உன் நினைவுகளும் என் காயங்களும் 555

***உன் நினைவுகளும் என் காயங்களும் 555 ***



ப்ரியமானவளே...


கொட்டும் மழைத்துளியில்
சட்டென நான் நனைந்தாலும்...

நீ ஓடிவந்து குடைபிடித்த
நினைவுகள்
என்னை கொள்ளுதடி...

இன்று தனிமையில்...

நிழலாக நான் உன்னை
தொடரும் போதெல்லாம்...

இரு
ளாகவே
என்னை விரட்டியடிக்கிறாய்...

நீ வெறுத்து
ஒதுக்கிறாய் என்று தெரிந்தும்...

உன்னையே நினைக்கும் என் மனதிடம்
நான் எப்படி சொல்வேன்...

காதலை நீ
மறந்து சென்ற
நாளில்...

இந்த ஆலமரமும்
பட்டுவிட்டது...

தினம்
துளிர்விடுவது என்னவோ...

நீ கொடுத்த
காயமும்
நினைவுகளும்தான்...

இன்றுவரை இதழ்கள்
திறந்து பேச மறுக்கிறாய்...

தொடர்ந்து
என்னை
நீ வெறுக்கிறாய்...

தினம் உன்னுடன்
நான் சேர்க்கிறேன்...

உன் நிழலோடு அல்ல
உன் நினைவுகளோடு.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (4-Apr-23, 8:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 308

மேலே