தோழமைகளே உயிர் தர வாரீர்

தோழமைகளே !
தோழமைகளே !
வாரீர் வாரீர்...!

தோழா....
நான் உன் உடைமையாவேன்
நான் பெற்ற என் பிள்ளைக்கு
உயிர் தர வாரீர் - அவன்
நன்றிக்கடனாக

கோடை காலங்களில்
நிழல் ஒன்றை தருவான் ..‌.
உன் தாகம் தீர்க்க
நீரினை அழைப்பான்

உன் பிள்ளைகளை
தொட்டில் கட்டி வளர்ப்பான்
நீ நீர் ஊற்றி வள - அவன்
சுவாசம் கொடுத்து வளரப்பான்

தோழா...
நீ அவனுக்கு வேலிகளாக இரு
அவன் உன் களைப்பு - தீர
கட்டிலாக மாறுவான்
உன் பிள்ளை -தூங்க
தொட்டிலாக இருப்பான்

தோழா ...
உயிர் ஒன்று தா - அவன்
உணவு பல தருவான்

எம்பிள்ளைகள் போல்
என்னற்ற பிள்ளைகளை வள
அவர்கள் உன் சந்ததிகளை
வளர்ப்பார்கள்...

உயிர் ஒன்று தா - நான்
உன் உறவு என்று சொல்ல
என் உறவினர் பலர் வந்து சொல்ல

உயிர் ஒன்று தா...
அ.நாச்சான்

எழுதியவர் : நாச்சான் (6-Apr-23, 12:44 pm)
சேர்த்தது : நாச்சான்
பார்வை : 59

மேலே