கிருபானந்த வாரியார் மதம்பற்றிய பேச்சு
சைவம் பழம்பெரும் மதமே பாரு
ஆறது கடவுளாய் சிவன்மால் துர்கை
சூரியன் கணபதி அறுமுகன் தொழுவர்
பரம்பொருள் சிவமயம் சதாசிவம்
உருவமும் அறுவமும் உருவருபம் சிவமே
ஜைனம் புத்தம் இஸ்லாம் கிருத்வம்
எல்லாம் சின்ன பள்ளி கூடம்
சின்ன பள்ளிக்கு வாத்தி ஒன்று
ஜைன மதத்தின் வாத்தி மகாவீர்
புத்த மதத்தின் ஆசான் புத்தர்
விவிலிய மதவாசான் கிறித்து
முகமதி யமதத் துடையாசான் முகமதுவே
சைவம் காலேஜ் ஆக நால்வர்
சைவர்க்கு சம்மந்தர் சுந்தரர் அப்பர்
நான்கு மாணிக்கம் கிருபா
னந்த வாரியார் வார்த்தை கேளே
ஆரம்ப பள்ளிக்கு ஒருவாத்தி யாராம்
ஆனால் இந்து காலேஜ் நாலு
வாத்தி மாரக்கொண்ட தெனச்சொன்னார்
தமிழராம் கிருபா னந்த வாரியாரே
கிருத்து வர்கோர் வேதம் பைபிள்
கருத்தாய் முஸ்லீம் வேதமும் குர்ஆன்
இந்து வேதம் நான்கு ரிக்யஜூர்
பெரியமதம் அதனால் நான்கு
வேத முள்ளே கல்வியெலாம் அடக்கமே
சைவம் நான்கு படிகள் கொண்டது
சரியை பின்கிரியை மூன்று யோகம்
நான்காம் ஞானம் வகுத்த
படிகளின் விவரம் சொன்னார் கேளே
(1)
சரியை என்றது இறைவனை வெளியே
கோயில் உள்ளேயும் சிலைபல
சன்னதி வைத்ததை தொழுதல் என்றாரே
(2)
கிரியை என்றார் கேளும் புறத்தே
வைத்தும் பின்மனத்தே தொழுதலை
கிரியை என்று சொல்லி வைத்தாரே
(3)
யோக மார்கம் சொன்னாரே விளக்கமாய்
புனிதமாம் புறவழி யுடனக வழிபாடும்
முனியாய் கானிலும் மனிதரு டருடன்
இனிதாய் தொண்டு செய்தலாம்
யோகி என்பான் தனித்தே இருப்பானே
(4)
ஞானம்
ஞானி யென்பான் பார்ப்பான் அதுவென
தனித்துப் பார்க்கான் எல்லாம் ஜீவன்
ஜீவனை பிரித்து பார்க்கான்
ஆண்டியும் அரசனும் ஒன்றேன்பான் பாரே
ஆகம விதிகள்
சிவனுக்கு நான்கு சக்திகள் உண்டு
குண்டானுள் அண்டா நுழையும் நுழையா
கண்ணா அண்டாவுள் குண்டான் போகும்
பெருமாளுள் சிவன் அடங்கார் ஆதலின்
பெருமாள் கோயிலில் சிவனை வைக்கார்
சிவத்தின் உள்ளே மாலவன் அடக்கம்
ஆதலின் சிவன் கோயிலில் பெருமாளும்
ஓரம்தனி இடமதில் இருப்பார்
இதுவே தாத்பரியம் பெரியோர் வாக்கே
சும்மா இருப்பதைத் சிவனே என்றிருப்
பவரையேக் குறித்திடு மாங்கேள் பின்னும்
சிவனின் ஆற்றல் யாதென் கேளும்
சொல்வேன் ஆற்றலும் பிரித்தார் நான்காய்
ஒன்றதருள் கோபம் போருடன் புருஷ
சக்தி நான்கு என்பர் சான்றோர்
அருளை அள்ளியே தருவள் பார்வதி
கோவத் தைதுர்கை யும்போரைக் காளியும்
புருஷ குணத்தை நாராயணி
அருள் பாலிப்பாள் என்பது விதியே
சிவனின் மைந்தர் நான்கு வீர
பத்திரர் விநாயகர் முருகன்
வைரவர் இவர்நால்வர் சிவனின் மைந்தரே
நேரிசை வெண்பா
பிரம்மனுக்கு பிள்ளை பிறந்தது நான்கு
பிரமச்சாரி பேரே பெருமை -- தரமாம்
சனந்தனர் பின்னே சனகர் சனாதனர்
கனத்த சனந்தனர்நால் காண்
..... தொடரும்