உறுதி ஏற்போம்

பொய்யும் புரட்டும்
நிலைத்த விட்டதால்
மெய்யும் ஒதுங்கிச்
சென்றது !
பாசமும் நேசமும்
மறைந்து போனதால்
வேசமும் போலியும்
குறிக்கிறது ! வாய்மையும் நீதியும்
மயங்கிக் கிடப்பதால்
மனிதம் மண்ணில்
மறைந்தது !
நேர்மையும் நன்னெறியும்
சோர்ந்து ஓய்ந்ததால்
நம்பிக்கை நலிவுற்றது
நானிலத்தில் !

சுயஅறிவும் சிந்தனையும்
சுருண்டு படுத்திருப்பதால்
உள்ளம் உருகுலைந்தது
உலகில் !
பகுத்தறிவும் பண்பாடும்
தேய்ந்த தேகமானதால்
நோயுற்ற மனிதனானது
சமுதாயம் !

பொதுநலனும் நல்மனமும்
நலிவுற்ற உடலானதால்
மலிவுவிலை பொருளானது
மானிடம் !
ஈகையும் இரக்ககுணமும்
நீர்த்த நிலையானதால்
தன்னலம் தரணியெங்கும்
தலைதூக்குகிறது !

தட்டி எழுப்புவோம்
நாடி நரம்பினை
கட்டி அணைப்போம்
நல்ல மனங்களை !
மாற்றிக் காட்டுவோம்
மனித இனத்தை !

சமதர்மம் சமத்துவம்
நிலைக்க பாடுபடுவோம் !
ஏழ்மையை ஒழித்து
ஏற்றம் பெறவும்
உறுதி ஏற்போம் !


பழனி குமார்
22.04.2023

எழுதியவர் : பழனி குமார் (22-Apr-23, 8:41 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 49

மேலே