பிடுங்குந் துன்பமும் பேரிடி ஆக்குமே - கலிவிருத்தம் முயலலாமே

திரு.கவின் சாரலன், வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன், திரு.நன்னாடன், திரு.மெய்யன் நடராஜ், திரு.பழனி ராசர், திரு.சக்கரை வாசனார் உட்பட யாரேனும் கீழ்க்கண்ட இலக்கணத்தைப் புரிந்து, இதனைப் பதிந்து, தளையும், சீர்களும் தானே ஆராய்ந்தோ, அவலோகிடம் வழியோ தெரிந்து ஒரு கலிவிருத்தம் எழுதுங்களேன்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்;
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு;
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)

உடல்பெ ருத்தால் உறக்கம் பெருகிடும்;
பிடுங்குந் துன்பமும் பேரிடி ஆக்குமே!
அடக்கும் ஆசை அகிலமும் நேர்த்தியாய்க்
கிடைக்கும் யாவையும் கேண்மையும் சேர்க்குமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-23, 9:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே