நல்லமழை பெய்தாலே நாடுநலம் பெருகுமையா - கலிவிருத்தம்

(கூவிளங்காய் / காய் 3)
(1, 3 சீர்களில் மோனை)

நல்லமழை பெய்தாலே நாடுநலம் பெருகுமையா;
தொல்லுலகில் யாவருமே துணையிருப்பர் எளியோர்க்கு!
வல்லரசே என்பதெல்லாம் வகையாக ஆளுவதே;
செல்லுபடி யாகிடுமோ சிந்தையெலாம் மகிழ்வதற்கே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-23, 11:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே