மாமா உன் மடியிலே

மாமா உன் மடியிலே
£££££££££££££££££

மஞ்சுவிரட்டு காளைதனை
பஞ்சாக பிடித்தவனே/
நெஞ்சுரம் கொண்டயுனை
மிஞ்சிட்டோர் உண்டோ/

வஞ்சிரம் மீனாக
வலையிட்டு தூக்கியே/
வஞ்சி வீழ்த்திடுவேன்
வசீகரப் பார்வையால்/

அஞ்சாக் காளையனை
அடக்கிடுவேன் பாசத்தாலே/
கொஞ்சிடவே ஆசைதான்
கொண்டுவா தாலியொன்று/

இஞ்சியிடுப்பிலே உனை
இணைத்திடுவேன் சாவியோடு/
கெஞ்சினாலும் விடாது
கெட்டியாகப் பிடித்திடுவேனே/

நெஞ்சம் வசிப்பவனே
நினைவில் வாழ்பவனே/
தஞ்சமாவேன் மாமா
உன் மடியிலே/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Aug-23, 5:26 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 90

மேலே