நவராத்திரி

நவராத்திரி பண்டிகை

அசுரனை அழிக்கவேண்டி அவதாரம் எடுத்து
ஆயுதங்கள் ஏந்தி மூன்று சக்திகளும் ஒன்றாகி
இன்னல்களில் இருந்து உலக மக்களை காக்க
ஈசனும் வியக்கும் ஒரு மாபெரும் சக்தியாகி
உயிரினங்களை அழிவில் இருந்து காப்பாற்ற
ஊறுவிளைவிப்போரை அடியோடு அழித்திட
எங்கும் நிறை சக்தியாகி கடுமையாக போரிட்டு
ஏக்கமுடன் முறையிட்ட தேவர்களை ரட்சித்து
ஐம்புலனையும் அடக்கி காணும் ஆதி சக்தி
ஒன்பது தினங்களில் அசுரகுலத்தை அழித்து
ஓராயிரத்தெட்டு நாமாக்களுடன் விளங்கிய
அன்னையவள் அருளை பெற ஒன்பது இரவுகள்
குவலயம் கொண்டாடிடும் பண்டிகை நவராத்திரி
என அறிவோம்

எழுதியவர் : கே என் ராம் (13-Oct-23, 4:22 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 13

மேலே