வாடா மலரே

வாடா மலரே !
———-

சூடிடும் பூவெலாம்
சுருங்கிடும் மறுநாள் /

வாடிடா மலருன்னை
வரித்தேன் துணையென /

ஆண்டுகள் சருகென
அகன்றிட்ட போதிலும் /

திகட்டிடா அன்பிற்கு
தினந்தினம் சரங்களே /

வயதென்ன செய்திடும்
வாலிபம் நெஞ்சிலே /

மயங்காத நேசம்தான்
மானுடர் வாழ்க்கையே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (27-Oct-23, 6:04 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே