இவள்----
இவள் அழகை ஓவியமாய் வரைந்திடும்
முயற்சியில் ஓவிய புருசு தேய்ந்தது
நிறமைகள் அத்தனையும் கரைந்தன
இன்னும் இவள் பூரண அழகு
கண்டேன் அல்லன் நான் அவ்வோவியத்தில்
ஏனோ புரியவில்லை ....
சரி, கவிதையில் இவள் அழகைப்
பூட்டிவைத்திடலாம் என்று முயற்சித்தேன்
கவிதையும் முற்றுப்பெற வில்லை
ஏனோ தெரியவில்லை ...
இவள் அழகு அமானுஷ்யமானதா ..
இவள் எனக்கு புரியாத புதிர்தான்
ஆனால் என்மீது இவளுக்கு
அலாதி அன்பு....காதல்...ஆசை