போதாதா தீராதா

பேய் நகரம்
பெயர் நரகம்
பெயர் சொன்னால்
உயிர் நடுங்கும்

மனிதனின் சாபம் மாதத்தில் பிறந்ததாலா
மண்ணின் சாபம் மனிதன் பிறந்ததாலா

உயிர் மாய்த்தும் சுதந்திரம் வேண்டுமென ஒருபுறம்
மறுபுறம் உயிர்போன பின்
சுதந்திரம் எதற்காகவோ?

உடல் வேண்டாம்
உயிர் வேண்டாம்
உறக்கம் வேண்டாம்
உறவும் வேண்டாம்

வேண்டும் வேண்டும்
மீண்டும் வேண்டும்
போர்காலம் எதற்காகவோ?
போர்களம் எதற்காகவோ?

உடலை அழித்துகொண்டு
உயிரை மாய்து கொண்டு
உருவெடுக்க பேய் நகரம்
உயிர் எடுக்க பேய் நரகம்

இரு மதங்களை தொட்ட காற்று
இரு மனங்களை தொடவில்லயா?
இருமதத்தாரின் சடலங்களை
மண் வளமாக்காவில்லையா?

இருமதத்தாரும் போர் தொடுத்தபடியே
இருமத கடவுளும் கை
கட்டிய படியே

போராதா?
போராதா?
அழிந்ததும் தொலைந்ததும்
விழுந்ததும் இழந்ததெல்லாம்

தீராதா?
தீராதா?
வலியினில் உடைந்திடும்
மனங்களின் அழுகயெல்லம்

போர்க்களம் ஏன் ஐயா!
போர்க்களம் ஏன் ஐயா!
பகை தீருமா?
பகை தீருமா?

அன்பை காட்டிட
ஆயுதம் ஏன் இறைவா?
உன்னை அறிந்திட
நரபலி தேவையா?

எழுதியவர் : Rskthentral (1-Nov-23, 12:37 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 79

மேலே