விண்ணிற் றோன்றிடும் வியன்னிலா - கலித்துறை
கலிநிலைத்துறை 
(குறிலீற்றுமா   கூவிளம்   விளம்   விளம்   விளம்)
விண்ணிற் றோன்றிடும் வியன்னிலா விந்தையுங் 
..காட்டுதே;
பெண்கள் பார்த்திடும் பார்வையில் பேதமுங் 
..கண்டிலேன்!
கண்கள் காண்கிற காட்சியிற் கள்ளமு 
..மில்லையே;
உண்மை சொல்லுவா யுன்றனி னுள்ளத்தி 
..லுள்ளதை! 
- வ.க.கன்னியப்பன்
 
                    
