இவள்
இவள்
------------
இளமைப்பருவத்தில் .....
அவள் அழகென்னும் சொல்லிற்கு
பொருளாய்த் திகழ்ந்தாள்
இளமைப்பருவம் கழிந்தது
இடைக்கால பருவம்
அவள் அன்பின் சின்னமாய்த்
தாய்க்குலம் போற்றும் சிந்தாமணியாய்த்
திகழ்ந்தாள்......
முதுமைப் பருவம்...
குன்றா எழிலோடு
பண்பின் சிகரமாய்த் திகழ்கின்றாள்
தெய்வம்போல ...
என்ன பாக்கியம் பெற்றேன் நான்
இவள் என்னவள் என்று நினைக்கையில்