பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால் சுகமுறுதல் – நீதி வெண்பா 5
நேரிசை வெண்பா
பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே நல்நா
வகைசேர் சுவைஅருந்து மாபோல் - தொகைசேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்(து) அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில். 5
- நீதி வெண்பா
பொருளுரை:
நல்ல நாக்கானது பகைமையைச் சேர்த்தே தரும் முப்பத்ரெண்டு பற்களையும் துணையாகக் கொண்டே பலவகை சுவைகளையுடைய உணவை உண்ணுந் தன்மை போல,
நற்குணமுடையோர், செய்யும் செயலால் மிகுந்த துன்பத்தைச் சேர்த்தளிக்கும் பகைவரிடத்திலும் உண்மையான அன்பு கொண்டு அவர்களால் இன்பம் அடைவார்கள் என்பதாகும்..
கருத்து:
நல்லோர்கள் பகைவர்களிடத்தும் அன்பு பாராட்டி அவர்களிடம் நன்மையடைந்து சுகம் பெறுவார்கள்.