கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 13

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 13

திரிஷாவின் அம்மா அபிராமி கெளதமை மகன் என்று சொன்னதை அவனால் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுது கவலைகளை மறந்து குளித்து, பவுடர்,வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டு புது துணி அணிந்து அவன் இவன் விஷால் போல் அறையை விட்டு வெளியே வந்தவனை பார்த்த திரிஷா..

நடிகர் பாக்யராஜ் மாறி இல்லையென்றாலும் அவர் சிஷ்யன் பாண்டியராஜன் மாறி சுமாராக இருக்க என்று கலைத்து சிரித்த சிரிப்பில் அவள் மலர்ந்த வெள்ள ரோஜா வாக அவன் அவளைக் கண்டு ரசித்தான்..

வீட்டிலிருந்து வெளியே வந்தவள் radio operatorயை கூப்பிட்டு நெஞ்சிருக்கும் வரை படத்தில் உள்ள "ஒரு முறை பிறந்தேன்" பாட்டை போடுங்க என்றான்..பாடல் ஒலிக்க இது கெளதமின் வேலை தான் என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்..

jaguar red colour car 20 car அணிவகுத்து நிற்க அதன் முன் கேரளா செண்டை மேளம், தமிழகத்தின் நையாண்டி மேளம்,Bant set மட்டும் ஒயிலாட்டம், மயிலாட்டம் யென ஆடி வர..வெடிச் சத்தம் வானத்தை பிளக்க தாய்மாமன் சீர்வரிசை ஊர் சுற்றி விழா நடக்கும் மண்டபம் வந்ததை பார்த்து கெளதம் நினைத்தான் இவ்வளவு பெரிய வீட்டு பெண்ணை ஆசைப்படுவது எவ்வளவு தவறு என்று உணர்ந்தவன்.. "காதலில் இதெல்லாம் சாதாரனம் " என்று கவுண்டமணி போல் சொல்லிக் கொண்டான்..

உலகப் புகழ் "லக்ஷ்மன் ஸ்ருதி " இசைக்குழுவின் இன்னிசை ஆரம்பித்தது முதல் பாடலை பக்தி பாடல் புகழ் "அருணா" அவர்கள் கண்ணாத்தாள் படத்திலிருந்து "காமாட்சி அம்மனுக்கு கிரகம் எடுங்க" பாடல் ஒலிக்க தொடங்கியது..

கெளதம் ஆர்கெஸ்ட்ரா பேண்ட்லீடரை சந்தித்து நெஞ்சிருக்கும் வரை படத்தில் உள்ள "ஒரு முறை பிறந்தேன்" பாட்டை படிங்க என்றான்.இசைக் குழுவின் பிரபல பாடகி ப்ரியா அந்த பாடலை பாடத் தொடங்கினர்..திரிஷாவிற்கு இந்த பாடல் அவளது காதை எட்ட தன்னையறியாமல் இன்னிசை நடைபெறும் இடத்திற்கு வந்தாள்..அவளை பார்த்த கெளதம் அடுத்த பாடலைப் பாட அவன் மேடையேறிவன் , உனக்கும் எனக்கும் என்ற படத்திலிருந்து " ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் " என்று பாட ஆரம்பித்தான். திரிஷா இவன் பாடுவான்? இப்படி பாடி அவள் பார்த்ததில்லை..

"பெண் தோழன் நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்" என்று அவன் பாடியது எனக்காகவே என்பதை உணர்ந்து..மெல்ல மெல்ல அவள் இதயம் ❤️ அவனை அடைய ஆரம்பித்தது..

அப்பாடலைத் தொடந்து கெளதமுடன் இசைக்குழுவின் Star ⭐ singer ஸ்ரீநிதி இணைய சரவணா படத்திலிருந்து "காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே" என்ற பாட்டை கெளதம் பாட ஆரம்பித்ததும் மண்டபத்தில் உள்ள சிறுசு முதல் பெருசுகள் வரை ஆட ஆரம்பிக்க மண்டபமே அதிர்ந்து ஆடியது.

"மௌனமாய் உன்னை நானே
மனபாடம் செய்கின்றேன்
தீண்டலில் இன்பம் கண்டு
திண்டாடி துடிக்கிறேன்
புத்தகம் நடுவே புகைப்படம் நீ
வானத்தில் எழுதா விடுமுறை நீ
இன்னொரு வானமாய் இருப்போமா
பூமியை தாண்டி நாம் பறப்போமா" என்ற வரிகளில் திரிஷாவை அம்புகளாக பாய்ந்து தூள் தூளாக்க அவனிடம் கரைந்தாள்..

பாடி முடித்ததும் இசைக்குழுவினரும் திரிஷா ,திரிஷா உறவினர் அனைவரும் வாழ்த்தினர்..

Function முடிந்ததும் அவன் வீட்டுக்கு கிளம்பிட அவனது பழைய சட்டையை எடுக்க அறைக்கு சென்றான்.அவனுக்கு பின்னே திரிஷா சென்றவள் கதவை சாத்தியவள் உதட்டு சாயத்தை நீரில் கழுவிய அடுத்த நொடி கெளதமின் நெற்றியில் முத்தமிட்டு I love you da என்றாள்..

சதுரங்க ஆட்டத்தில் ராணி சக்தி வாய்ந்தவள் என்பதை நிரூபித்தாள் .. அடுத்த சதுரங்க ஆட்டம்....?

......தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்..

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (8-Apr-24, 8:05 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 30

மேலே