குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஏழாவது - இடந்தலைப்பாடு

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

பெருநயப் புரைத்தல்.

தெய்வத்திறம் பேசல்.

பிரியே னென்றல்

பிரிந்து வருகென்றல்.

இடமணித் தென்றல்.

இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.

3 - வன்புறை முற்றிற்று.

நான்காவது – தெளிவு.

ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.

அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;

இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-

செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.

பாகனொடு சொல்லல்.

5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.

ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.

ஏழாவது--இடந்தலைப்பாடு.

அஃதாவது- இயற்கைப்புணர்ச்சியிற் கலந்த தலைவன் மறுநாளவ்விடத்தில் வந்து தலைவியைக் கூடுதல்; அது: தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென மூவகைப்படும்; அம்மூன்றுந் தந்த தெய்வந்தருமெனச் சேறல் முதல் ஆயத்துய்த்தலீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:--

தந்ததெய்வந் தருமெனச்சேறல்.

முந்துறக் காண்டல்.

முயங்கல்.

புகழ்தல்.

ஆயத் துய்த்தல்.

(இ-ள்) தலைவன் தலைவியை மகளிர் கூட்டத்துள் விடுத்தல்.

கட்டளைக் கலித்துறை

தண்டா ரகையின் கணநடு வேயொரு தண்மதியங்
கண்டா லலது சிறப்பில்லை யேநவ கண்டமெல்லாங்
கொண்டாடுஞ் சங்கம ராச குலோத்துங்கன் கோழிவெற்பின்
மண்டாய வெள்ளத் தெழுந்தருள் வாய்*மெள்ள வாணகையே! 41

இவற்றுள் - தந்ததெய்வந் தருமெனச் சேறலொன்றுந் தெய்வந் தெளிதற்கும், காண்டல் முயங்கல் புகழ்தலாகிய மூன்றுங் கூடற்கும், ஆயத்துய்த்தலொன்றும் விடுத்தற்கு முரியன. இதுவரையும் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.

7- இடந்தலைப்பாடு முற்றிற்று!

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (18-Apr-24, 7:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே