குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஏழாவது - இடந்தலைப்பாடு
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
பிரியே னென்றல்
பிரிந்து வருகென்றல்.
இடமணித் தென்றல்.
இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.
3 - வன்புறை முற்றிற்று.
நான்காவது – தெளிவு.
ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.
அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;
இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-
செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
பாகனொடு சொல்லல்.
5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.
ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.
ஏழாவது--இடந்தலைப்பாடு.
அஃதாவது- இயற்கைப்புணர்ச்சியிற் கலந்த தலைவன் மறுநாளவ்விடத்தில் வந்து தலைவியைக் கூடுதல்; அது: தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென மூவகைப்படும்; அம்மூன்றுந் தந்த தெய்வந்தருமெனச் சேறல் முதல் ஆயத்துய்த்தலீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:--
தந்ததெய்வந் தருமெனச்சேறல்.
முந்துறக் காண்டல்.
முயங்கல்.
புகழ்தல்.
ஆயத் துய்த்தல்.
(இ-ள்) தலைவன் தலைவியை மகளிர் கூட்டத்துள் விடுத்தல்.
கட்டளைக் கலித்துறை
தண்டா ரகையின் கணநடு வேயொரு தண்மதியங்
கண்டா லலது சிறப்பில்லை யேநவ கண்டமெல்லாங்
கொண்டாடுஞ் சங்கம ராச குலோத்துங்கன் கோழிவெற்பின்
மண்டாய வெள்ளத் தெழுந்தருள் வாய்*மெள்ள வாணகையே! 41
இவற்றுள் - தந்ததெய்வந் தருமெனச் சேறலொன்றுந் தெய்வந் தெளிதற்கும், காண்டல் முயங்கல் புகழ்தலாகிய மூன்றுங் கூடற்கும், ஆயத்துய்த்தலொன்றும் விடுத்தற்கு முரியன. இதுவரையும் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.
7- இடந்தலைப்பாடு முற்றிற்று!