ஏங்கி தவிப்பவர்கள்
"தெவிட்டும் சொல்லிற்கும்
தெவிட்டாத அமுதத்திற்கும்
நம்மைக் காணும் நம் சொந்தத்திற்கும்
நம்மைக் காணாத விரோதத்திற்கும்
நம்மைத் தேடும் நம் உள்ளத்திற்கும்
நம்மைத் தேடாத நம் புத்திக்கும்
நாம் தேடும் நம் நம்பிக்கைக்கும்
பாடும் பறவைக்கும்
பாடாத தேனீக்களுக்கும்
மணக்கும் மல்லிகைக்கும்
மணக்காத மாளிகைக்கும்
என்றும் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும் !"