மதுவைத் தொடாதே

மதுவைத் தொடாதே !
——-

ஓலம் கேட்கிறதே
ஒன்றும் புரியலையோ /

ஞாலம் திகைக்கிறதே
ஞானம் பிறக்கலையோ /

கைப்பொருள் கொடுத்தேதான்
காலனை அழைத்தீரோ /

மெய்ப்பொருள் அறியீரோ
மேனியை இழந்தீரோ /

போதையின் பாதையிலே
போகங்கள் ஏதுமுண்டோ /

பேதையாய் விடமருந்தி
பெருமையைத் தொலைத்தீரோ /

மதுவைத் தொடாதே
மரணத்தைத் தேடாதே /

புதுமை ஏதுமில்லைப்
பிழைத்திட வழியதுவே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (2-Jul-24, 11:09 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 21

மேலே