மதுவைத் தொடாதே
மதுவைத் தொடாதே !
——-
ஓலம் கேட்கிறதே
ஒன்றும் புரியலையோ /
ஞாலம் திகைக்கிறதே
ஞானம் பிறக்கலையோ /
கைப்பொருள் கொடுத்தேதான்
காலனை அழைத்தீரோ /
மெய்ப்பொருள் அறியீரோ
மேனியை இழந்தீரோ /
போதையின் பாதையிலே
போகங்கள் ஏதுமுண்டோ /
பேதையாய் விடமருந்தி
பெருமையைத் தொலைத்தீரோ /
மதுவைத் தொடாதே
மரணத்தைத் தேடாதே /
புதுமை ஏதுமில்லைப்
பிழைத்திட வழியதுவே !!
-யாதுமறியான்.