கொடுத்தவனை மறந்தோமே

கொடுத்தவனை மறந்தோமே


நாம் கடவுளை காண்பது கோவில் கல்லிலும்
நாம் கவலையை முழுதும் சுமப்பது மனதிலும்
நாம் காண்பவை யாவும் எடுப்பது கையிலும்
நாம் காண்பவர் வியக்க அணிவது உடலிலும்
நாம் காசு வேண்டி வாங்குவது கடன்களிலும்
நாம் கடமை என நேரம் கழிப்பது வேலையிலும்
நாம் காலப்பருவம் கண்டு உடல் மறைப்பது உடையிலும்
நாம் கள்வர் பயத்தால் பொருள் வைப்பது வங்கியிலும்
நாம் கல்யாண பந்தத்தால் இணைவது குடும்பத்திலும்
நாம் அன்பு செலுத்தி மதி மயங்குவது குழந்தையிலும்
நாம் வாழும் நாள் முழுதும் நமது கவனத்தை செலுத்தி விட்டு
நாம் அதைக் கொடுத்த அந்த இறைவனை நினைக்க மறந்தோமே

எழுதியவர் : கே என் ராம் (15-Jul-24, 8:05 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 38

மேலே